திருநெல்வேலி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு அதன் மாநில செயலாளர் முத்தரசன் இன்று (அக்.24) வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறி அவர் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் பெண்களை இழிவுபடுத்தி கூறவில்லை. மனு நீதியில் குறிப்பிடப்பட்டதை தான் அவர் கூறினார்.
மூத்த கம்யூனிஸ்ட் நிர்வாகி நல்லகண்ணு மீது சமூக வலைதளங்களில் இழிவாக பேசியபோது இதே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் ஆளுநர் தொடர்ந்து மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது.