தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு - சிக்கியவரின் நிலை என்ன? - வெள்ளத்தில் சிக்கிய பதினான்கு பேர் மீட்பு

திருநெல்வேலியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 14 பேரை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மீட்ட நிலையில் மாயமான ஒருவரை மட்டும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 23, 2022, 9:14 PM IST

திருநெல்வேலி : பணகுடி அருகேவுள்ள குத்திரபாஞ்சான் அருவியை அடுத்த கன்னிமாரா ஓடையில் குளிக்கச்சென்ற 15 பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். இதனையறிந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வள்ளியூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், வெள்ளத்தில் சிக்கிய 14 பேரை மீட்டனர். இதில், சின்ன முட்டத்தைச் சேர்ந்த நாயகம் என்பவரை மட்டும் காணவில்லை எனத்தெரிகிறது. அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு

இதற்கிடையே இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி காவல் துறையினர், வெள்ளத்தில் இருந்த மீட்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கோவை கார் விபத்து - திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயலா?

ABOUT THE AUTHOR

...view details