தமிழ்நாடு

tamil nadu

சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை

திருநெல்வேலி: இரண்டு மாவட்டத்தை சேர்ந்த படகுகள் கடலில் மோதியதால், இருதரப்பினரிடைய மோதல் எற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டது.

By

Published : Jul 6, 2019, 6:20 PM IST

Published : Jul 6, 2019, 6:20 PM IST

சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடிக்க தடை

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியை சேர்ந்த டெரென்ஸ் என்பவரின் நாட்டுப் படகு மீது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் விசைப்படகு நேற்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நாட்டுப் படகு கடலில் முழ்கியது. இந்த விபத்து திருநெல்வேலி மாவட்ட மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இரு மாவட்ட மீனவர்களிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்கத் தடை விதித்து கன்னியாகுமரி மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடிக்க தடை

இதனால் சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details