தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனுக்களால் குவிந்த கருத்துக் கேட்பு கூட்டம் - thirunelveli

திருநெல்வேலி : தென்காசி மாவட்டத்துக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆட்சியரின் மனு அளித்தனர்.

குற்றாலத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டம்

By

Published : Aug 18, 2019, 1:49 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டார்.

குற்றாலத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டம்.

இதையடுத்து கருத்துக்கேட்பு கூட்டம், வருவாய் ஆணையர் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர், கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஆகியோர் முன்னிலையில் குற்றாலத்தில் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் ஆணையரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்பு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தெரிவிக்கப்படுவதாக அலுவலர்கள் கூறினர்.

ABOUT THE AUTHOR

...view details