தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல ரவுடி 'நீராவி' முருகன் என்கவுன்ட்டர் : பின்னணி என்ன? - Neeravi murugan

தமிழ்நாடு காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை, உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா சுட்டு வீழ்த்தியுள்ளார்.

பிரபல ரவுடி ’நீராவி’ முருகன் என்கவுண்டர் : சிங்கம் சூர்யா பாணியில் செயல்படும் உதவி ஆய்வாளர்
பிரபல ரவுடி ’நீராவி’ முருகன் என்கவுண்டர் : சிங்கம் சூர்யா பாணியில் செயல்படும் உதவி ஆய்வாளர்

By

Published : Mar 16, 2022, 4:12 PM IST

Updated : Mar 16, 2022, 5:29 PM IST

நெல்லை:களக்காடு அருகே இன்று(மார்ச்.16) பிரபல ரவுடி நீராவி முருகன் காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யார் இந்த நீராவி முருகன்..? அவரது குற்றப்பின்னணி என்ன..? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

10 ஆண்டுகளாக தொல்லை தந்த ரவுடி

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அடுத்த நீராவிமேட்டைச் சேர்ந்தவர், முருகன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல் துறைக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வந்தார். ஆரம்பத்தில் சிறு சிறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர், நாளடைவில் கொலை, கொள்ளை, வழிப்பறி எனப் பல்வேறு பெரிய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

முருகன் என்ற இவரது பெயர் நாளடைவில் நீராவி முருகன் என்று மாறியது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்றாலும் ஈரோடு, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று முருகன் திருட்டுத்தொழிலில் கைவரிசை காட்டத் தொடங்கினார். குறிப்பாக நீராவி முருகன், சென்னையில் தங்கியிருந்து பல்வேறு கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு பலமுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீராவி முருகன் மீது மொத்தம் 3 கொலை வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கொள்ளையடித்த பணத்தில் நீராவி முருகன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர் ஒருவர் வீட்டில் புகுந்து சுமார் 40 சவரன் நகைகளை நீராவி முருகன் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து நீராவி முருகனை பல நாட்களாக தீவிரமாகத் தேடிவந்தனர்.

என்கவுன்ட்டரில் கதையை முடித்த உதவி ஆய்வாளர்

இந்நிலையில், நீராவி முருகன் தனது கூட்டாளிகள் உதவியுடன் நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் இசக்கி ராஜா தலைமையில் 4 காவலர்கள் இன்று களக்காடு அருகே இனோவா காரில் சென்றபோது நீராவி முருகனை சுற்றிவளைத்தனர். அப்போது உதவி ஆய்வாளர் இசக்கிராஜா நீராவி முருகனைப் பார்த்து சரணடையும்படி கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு எதிர்ப்புத்தெரிவித்த நீராவி முருகன், தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டதையடுத்து உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நீராவி முருகனின் நெஞ்சைக் குறி வைத்து சுட்டு வீழ்த்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்தத் தகவல் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட காவல் அலுவலர்கள் என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இசக்கி ராஜா யார்?

நீராவி முருகனை என்கவுன்ட்டர் செய்த உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தார். அப்போது கோவில்பட்டி பகுதியில் பல்வேறு ரவுடிகளை பிடித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பகத் சிங் மண்ணில் பதவியேற்றார் பகவந்த்!

Last Updated : Mar 16, 2022, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details