நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஏர்வாடி பகுதியில் பேசிய அவர், இஸ்லாமியர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக திமுக இருந்து வருகிறது. பொடா சட்டம், முத்தலாக் உள்ளிட்ட சட்டத் திருத்தங்களை திமுக கடுமையாக எதிர்ப்பதாகவும் ஆனால் அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறவில்லை பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது -மு.க ஸ்டாலின் தாக்கு! - DMK leader MK Stalin
திருநெல்வேலி: தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சி நடைபெறவில்லை பாரதிய ஜனதா ஆட்சிதான் நடைபெறுகிறது என நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சாடினார்.
![தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறவில்லை பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது -மு.க ஸ்டாலின் தாக்கு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4704104-thumbnail-3x2-tvl.jpg)
M.K Stalin speech
கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்டோர் இருந்தவரையில் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை, ஆனால் தற்போது நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப் பட்டுள்ளது. நீட் தேர்வு காரணமாக ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்துள்ளது. இதனால் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க:"தேசிய கொடியே பறக்கும், பாஜக கொடி பறக்காது" - தமிழ்நாடு பாஜக அறிவிப்பு