நெல்லை:கட்சி நிர்வாகி திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி பேரறிஞர் அண்ணா கலைஞர் காமராஜர் நடத்திய நல்லாட்சியினுடைய தொடர்ச்சியாக உள்ளது என நாட்டு மக்கள் பாராட்டிய வருகின்றனர்.
இதில் எந்த சந்தேகமும் இல்லை ஒரு ஆட்சி நடைபெறும் போது ஏற்றத்தாழ்வு என்பது இயற்கையானது ஆனால் ஆட்சியினுடைய கொள்கை கோட்பாடு லட்சியம் மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி என்று தெளிவாக சொல்லப்பட்டு இந்த திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டிற்க்கு மட்டுமல்ல தென்னகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உரியது என தற்போது ஆட்சி நடத்தும் தலைவர் மிகத் தெளிவாக கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு பொருத்தமான ஆட்சி எது என்று சொன்னால் இந்திய மக்கள் கூட்டு கலாச்சாரத்தில் ஊறிப் போனவர்கள் அனைவரும் ஒரு தாயின் மக்கள் என நிலை நிறுத்திக் கொண்டார்கள். இந்திய சுதந்திரத்திற்கு போராடிய அனைத்து சமுதாய மக்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
இது இந்த நாட்டினுடைய பாரம்பரியம் இது வடநாட்டில் பின்பற்றப்படுகிறதோ இல்லையோ தென்னாட்டில் பின்பற்றி வருகிறோம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தமிழ்நாட்டின் பிரிக்கப்பட முடியாத ஒன்று அனைத்து மதங்களும் இந்த கொள்கையின் அடிப்படையில் உருவாகியது இதுதான் திராவிட பாரம்பரியம் திராவிட மாடல் இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாக்கு உரியது இந்தியாவில் இப்படிப்பட்ட நல்லாட்சி வர வேண்டும் என்பதற்காக இங்கு ஆட்சியை நடத்துகிறோம்.
சட்ட திட்டங்களை உருவாக்குகிறோம் கல்வி ஆனாலும் சுகாதார மானாலும் பொதுநலம் என்றாலும் ஏழை எளிய மக்களுக்காக எந்த முயற்சி என்றாலும் அனைத்துக்கும் தமிழ்நாடு அரசு தெளிவான வழியை காட்டி அனைவருடைய நன்மதிப்பை பெற்று வருகிறது. ஆட்சி என்று வந்தால் போடுகின்ற திட்டங்களால் சிலருக்கு எதிர்ப்பு வரத்தான் செய்யும் அது காலப்போகுதியில் சரியாகி விடும்.
சட்ட திட்டங்கள் போடுவது போல வரிகளை மாற்றி அமைப்பது ஆளுகின்ற எந்த ஒரு அரசுக்கும் உரியதுதான் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அனைவரும் செலுத்தி வருகிறோம். அதில் தமிழ்நாட்டிலிருந்து 6.5 சதவீதம் செலுத்துகிறோம் இந்தியா தரப்பில் நமக்கு தரும் பங்கீடு 2.5% கூட கிடையாது என அவர்களே சொல்கிறார்கள்.அப்படி ஏற்றத்தாழ்வு நிறைய இருக்கும்போது அதையெல்லாம் மாற்றி எல்லா மக்களுடைய நன்மதிப்பை மற்றும் பாராட்டை பெறக்கூடிய ஆட்சியாக உள்ளது.