தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநெல்வேலியில் மிக கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..வெள்ளம் போல் காட்சியளிக்கும் குடியிருப்பு பகுதிகள்! - திருநெல்வேலி வெள்ளம்

Tirunelveli District Collector: கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (18.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகர் மற்றும் சில பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிப்பதால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

Tirunelveli District Collector
திருநெல்வேலியில் மிக கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..வெள்ளம் போல் காட்சியளிக்கும் குடியிருப்பு பகுதிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 5:53 PM IST

Updated : Dec 17, 2023, 7:28 PM IST

திருநெல்வேலி: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கைக் கடல் பகுதியில் நீடித்த காற்று சுழற்சி, தற்பொழுது மெதுவாகக் குமரிக் கடலை நோக்கி நகர்கிறது. இதனால் தென் தமிழக மாவட்டங்களில் இன்று(டிச.17) காலை முதலே மழை பெய்யத் தொடங்கி உள்ளது.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, மாநகர் மற்றும் கிராமப்புறங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, கூடங்குளம் பகுதிகளில் தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 8:30 மணி முதல் பிற்பகல் 4:30 மணி வரை பெய்த மழையின் அளவு பின்வருமாறு:மூலக்கரைப்பட்டி: 260 மி.மீ, பாளையங்கோட்டை: 260 மி.மீ, நம்பியார் அணைப்பகுதி: 252 மி.மீ, சேரன்மகாதேவி: 236 மி.மீ, நாங்குநேரி: 220 மி.மீ, பாபநாசம் 219 மி.மீ, ராதாபுரம் 209 மி.மீ, அம்பாசமுத்திரம் 201 மி.மீ, களக்காடு: 194 மி.மீ, நெல்லை மாநகர்: 162 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு: கனமழை காரணமாக நாளை (18.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்கள் அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு இயங்குமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நெல்லையில் விடிய விடிய கனமழை.. தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Last Updated : Dec 17, 2023, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details