Dengue issue Tamilnadu நெல்லை, தனியார் ஓட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
'தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை விட மிகக்குறைவு. இதுவரை 210 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஐந்து நாட்கள் வரை காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் அனுமதிக்க அறிவுறுத்தபடுகிறார்கள்.