திருநெல்வேலி: தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா நேற்று (மே.11) திடீரென நாகர்கோவில் தனியார் மருததுவமனையில் வைத்து மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அடுத்த வேப்பிலான்குளம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது, நெல்லை சிவாவின் உடலுக்கு ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த நடிகர் நெல்லை சிவா 1985ஆம் ஆண்டு வெளியான 'ஆண்பாவம்' திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்த 'கிணத்தை காணோம்' என்ற நகைச்சுவைக் காட்சிபட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.