திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளராக திரைப்பட தயாரிப்பாளரும், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் ராயப்பன் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் விதிகளை மீறி அதிகளவு வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து பாளையங்கோட்டை காவல்துறையினர் அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 200 பேர் மீது தேர்தல் விதிகளை மீறியதாகவழக்குப்பதிவு செய்துள்ளனர்.