தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக அரசு அனைத்து மாவட்ட எல்லைகளையும் முடக்கியுள்ளது. மேலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் தலைமை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் கரோனா தொற்று அறிகுறியுடன் 13 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், நெல்லை அரசு மருத்துவமனையில் துபாயில் இருந்து வந்த நெல்லை மாவட்டம் திரும்பிய வள்ளியூர் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார்.