தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகை முயற்சி..பாஜகவினரை தேடித்தேடி கைது செய்த காவல்துறை..நெல்லையில் நடப்பது என்ன? - இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்

BJP protest in tirunelveli: அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து இந்து சமய அறநிலையத் துறை அறநிலையத் துறை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

BJP protest in tirunelveli
நெல்லையில் பாஜகவினர் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 11:33 AM IST

Video

திருநெல்வேலி: அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பதே முதல் காரியம் என்று பேசி இருந்தார். அவரின் பேச்சு நாடு முழுவதும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருளாக மாறியது.

மேலும் அதே கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி சனாதனமும் இந்து மதமும் வெவ்வேறு அல்ல என்று பேசி இருந்தார். குறிப்பாக இந்தக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதனை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மிக உரிமையை சேகர்பாபு இழந்து விட்டார் எனவும், வரும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் தனது பொறுப்பில் இருந்து அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பாஜக சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள, நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையாளர் அலுவலகத்தை நெல்லை மாவட்ட பஜகவினர் முற்றுகையிட போவதாக அறிவித்துருந்தனர். அதை தொடர்ந்து நெல்லை மாநகர காவல் உதவி ஆணையாளர் பிரதீப் தலைமையிலான காவல் படை அறநிலையத் துறை அலுவலகத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது போராட்டத்திற்கு வேன், கார், பைக் ஆகியவற்றில் வந்த பாஜகவினரை ஆங்காங்கே தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு நெல்லை மாநகர முன்னாள் மேயர் புவனேஸ்வரி தலைமையில் பாஜகவினர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் அமைந்திருக்கக் கூடிய சாலையில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே அறநிலையத் துறை அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

அப்போது கைது செய்யப்பட்டவர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களும், அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர். மேலும் சில பொது மக்களிடமும் விசாரித்த போலீசார், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட வராதவற்கள் என உறுதி படுத்திய பிறகு தான் அவர்களை கைது செய்யாமல் விட்டனர். நெல்லையில் பிரதான பகுதியில் கைது நடவடிக்கையில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் 80 சதவீதம் கல்வித்துறையிலிருந்து வருகிறது - மதுரை உயர்நீதிமன்றம் கருத்து

ABOUT THE AUTHOR

...view details