தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாபநாசம் அணை நிரம்பியது: தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை - 4 thousand 680 cubic feet of water in the Tamiraparani river opening

திருநெல்வேலி: பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியதால், வெள்ள பாதிப்பு இல்லையென்றாலும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

papanasam dam
papanasam dam

By

Published : Dec 18, 2020, 7:07 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான பாபாநசம் அணை முழு கொள்ளளவான 143 அடியை எட்டியது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரம் கன அடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆற்றில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ள அபாயம் எதுவும் இல்லை என்றும் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

தாமிரபரணியில் வெள்ள அபாயம் இல்லை

இதுகுறித்து ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பாபநாசம் அணை நிரம்பியதால், இன்று முதல் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை சேர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய சூழல் இல்லை. இது வழக்கமான எச்சரிக்கை தான். அணைக்கு தண்ணீர் வரத்தை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

4 ஆயிரத்து 680 கன அடி நீர் திறப்பு

தாழ்வான பகுதியான அம்பை விகே.புரம் சேரன்மகாதேவி உள்ளிட்ட ஆற்றோர பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை மித் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. தற்போது, 4ஆயிரத்து 680 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நேற்று (டிச.18) மலை பகுதியில் மட்டும் 35 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 3 வாரங்களாக குழு அமைக்கப்பட்டு கால்வாய் மற்றும் குளங்கள் பராமரித்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க:'நாடோடிப் பெண்களுக்கு இருக்கும் அக்கறை, படித்தவர்களுக்கு இல்லை' - ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details