தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தென்காசி மாவட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேலகரம் பேரூராட்சி பகுதியில் அரசுக்குச் சொந்தமான 38 ஏக்கர் நிலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கட்ட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து திமுக மாவட்டச் செயலாளர் பத்மநாபன், நகரச் செயலாளர் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைக்கக்கூடாது என்று பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.