தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 7, 2021, 10:06 PM IST

ETV Bharat / state

குடிபோதையில் மகள், மருமகனை கொலை செய்த நபர் கைது!

பாப்பாகுடி அருகே குடும்பத் தகராறில் குடிபோதையில் தனது மகள், மருமகனை கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மகள், மருமகனை கொலை செய்த நபர் கைது
மகள், மருமகனை கொலை செய்த நபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலை அடுத்த பாப்பாகுடி காவல் சரகம் நந்தன் தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் புலேந்திரன் (55). இவரது மகள் மஞ்சு என்ற உச்சிமாகாளி. புலேந்திரன் தனது மகள் மஞ்சூவை செல்வம் (29) என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த சூழலில் இன்று (ஏப்.7) திடீரென புலேந்திரன் தனது மகள் மஞ்சு, மருமகன் செல்வத்தை அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர்.

கைது செய்யப்பட்ட புலேந்திரன்

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பாக்குடி காவல் துறையினர், இருவரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மஞ்சுவின் கணவர் செல்வம் தனது மாமனார் பேச்சை கேட்காமல் குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சூழலில் புலேந்திரன் மதுபோதையில் தனது மருமகன் செல்வத்திடம் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென அரிவாளால் செல்வத்தை வெட்டியுள்ளார். அதனைப் பார்த்த மகள் மஞ்சு, தனது தந்தையை தடுத்துள்ளார்.

மது போதையில் மகள் மஞ்சுவையும் சரமாரியாக வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து புலேந்திரனை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: பப்ஜி விளையாட்டிற்கு அடிமை: காணாமல்போன சிறுவன் கொலை

ABOUT THE AUTHOR

...view details