தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 5, 2022, 11:54 AM IST

ETV Bharat / state

தாமிரபரணி ஆற்றில் மிதந்த ஆண் சடலம்- கொலையா?

தாமிரபரணி ஆற்றில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. கொலையா? தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தாமிரபரணி ஆற்றில் வந்த ஆண் சடலம்!- கொலையா? ; போலீஸ் விசாரணை
தாமிரபரணி ஆற்றில் வந்த ஆண் சடலம்!- கொலையா? ; போலீஸ் விசாரணை

திருநெல்வேலி: நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.

அதன் பேரில் பாளையங்கோட்டை மற்றும் நெல்லை சந்திப்பு காவல் நிலைய காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் உள்ளன. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது உசேன் என்பது தெரியவந்தது.

இவர் சாம்பிராணி புகை போடும் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:திருநெல்வேலி காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details