தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு - காவல்துறை விசாரணை! - தேனி மாவட்ட செய்திகள்

தேனி: வருசநாடு அருகேவுள்ள மூலவைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

youth-drowns-in-river-police-investigation
youth-drowns-in-river-police-investigation

By

Published : Sep 23, 2020, 7:58 PM IST

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வைகை நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(24). இவர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுவதற்காக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பசுமலைத்தேரி பகுதியில் செல்லக்கூடிய மூலவைகை ஆற்றில் இன்று குளிப்பதற்காக சென்ற விஜயகுமாருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வருசநாடு காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சேலம் ஆயுதப்படை காவலர் கடன் தொல்லையால் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details