தேனியில் சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா கடத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த தனிப்படைக்கு வெற்றி எனும் மோப்பநாய் உதவியாக இருந்தது. இந்நிலையில் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட வருசநாடு பகுதிகளில் மோப்ப நாய் வெற்றி உதவியுடன், தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்கராஜபுரம் பகுதியில் உள்ள வேலு என்பவரது வீட்டை சந்தேகத்துடன் மோப்ப நாய் வெற்றி அடையாளப்படுத்தியது.