தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

தேனி: ஆண்டிபட்டி அருகே காற்றாலை மின்மாற்றியில் ஏறிய சிறுவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Jun 2, 2019, 10:22 AM IST

File pic

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரோசனப்பட்டியைச் சேர்ந்தவர் தவமுத்து. இவர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில் தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த தவமுத்து தனது நண்பர்களுடன் அருகில் உள்ள காற்றாலை முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நண்பர்கள் தவமுத்துவின் காலணியை காற்றாலை மின் மாற்றியில் தூக்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அதனை எடுக்கச் சென்ற தவமுத்து மின்சாரம் தாக்கி பலியானார். தகவல் அறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து தவமுத்துவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details