தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக-அதிமுகவுக்கு ஓட்டுபோட்டா கையில் குஷ்டம் வரும்' சீமான் பேச்சு!

தேனி: அதிமுக-திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளின் கூட்டணிகளுக்கு மக்கள் வாக்களித்தால் அவர்களுக்கு குஷ்டம்தான் வரும் என சீமான் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

By

Published : Apr 4, 2019, 9:57 AM IST

தேனியில் சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களாமேட்டில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சாகுல் அமீது, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அருணாதேவி, பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சோபனா ஆகியோரை ஆதரித்து பரப்புரையில் ஈடுப்பட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, பொருளாதாரத்தில் உற்பத்தி, சேவை உள்ளிட்ட பல படிநிலைகள் உள்ளன. அதில் பாஜக அரசு அடாவடி பொருளாதாரத்தை அமல்படுத்தியுள்ளது. உண்மை, நேர்மை, துணிவு இருந்தால் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் எந்த அரசியல் கட்சியாவது களத்திற்கு வர வரமுடியுமா? மேலும் தாமரை, உதயசூரியன், கை உள்ளிட்ட அதிமுக-திமுக திராவிட கூட்டணிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு குஷ்டம்தான் வரும் என்று பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details