தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 20, 2019, 8:02 AM IST

ETV Bharat / state

“நம் மாணவர்கள் உலகளவில் போட்டியிட வேண்டும்” - வைரமுத்து

தேனி: புதிய கல்விக் கொள்கை என்பது அவரவர் தாய்மொழியை முதன்மையாகக் கொண்ட கல்வியாக இருக்க வேண்டும் எனக் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

vairamuthu supporting govt school students

தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில், 12ஆம் வகுப்பு முடித்து மேற்படிப்பு கற்க வசதி இல்லாமல் தவிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு, வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு வருடமும் கல்வி நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான நிதி உதவி வழங்கும் விழா பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

“வைரமுத்து கல்வி அறக்கட்டளை” நிதியுதவி வழங்கும் விழா

இவ்விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து ஐந்து மாணவர்களுக்குக் கல்வி நிதி உதவியாக தலா 20ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பின்னர் பேசிய அவர், ஜாதி, மதம், மொழி, இனம், இடம் எனப் பிரிந்து கிடந்த மனிதனை கடவுள், இயற்கை, என எதுவும் ஒன்று சேர்க்கவில்லை. பிரிந்து கிடந்த மனிதனை ஒன்று சேர்த்திட வந்த மந்திரம் கல்வி என்கிற கருவி தான் என்பதை இந்த மண் மறந்து விடக்கூடாது. கல்வியால் மட்டுமே நாம் அனைவரும் ஒன்றிணைய முடியும் என முன்னோர்கள் வகுத்தார்கள்.

அறிவு என்பது விதையைப் போலத் தூவப்பட வேண்டுமே தவிர, ஆணியைப் போல அடித்து விடக்கூடாது. தமிழின் பெருமைகளைத் தவிர்த்து விட்டு, வெளிநாட்டு, பிற மாநில அறிவை திணித்து விட முற்பட்டால் அதனைக் கடைசி தமிழன் உள்ளவரை எதிர்ப்பான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கனவு காணும் தந்தையர், ஒவ்வொருவரும் மது அருந்த மாட்டோம் என அவரவர் பிள்ளைகளிடம் சத்தியம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

விழாவின் இறுதியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தான் எழுதி வெளியான திருமுருகாற்றுப்படை எனும் புத்தகத்தை இலவசமாக வைரமுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கெங்குவார்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details