தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழிவறை தொட்டியில் விழுந்த இரு குழந்தைகள் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல் - pannaipuram

தேனி அருகே விளையாடிக்கொண்டு இருந்த இரண்டு குழந்தைகள் கழிவறை தொட்டியில் விழுந்து உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கழிவறை தொட்டியில் விழுந்த இரு குழந்தைகள் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்
கழிவறை தொட்டியில் விழுந்த இரு குழந்தைகள் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்

By

Published : Sep 30, 2022, 12:03 PM IST

தேனி: பண்ணைபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் நிகிதா ஸ்ரீ (7), பண்ணைப்புரம் கரியம்பட்டி ஜெகதீசன் என்பவரின் மகன் சுபஸ்ரீ (6) இரு குழந்தைகளும் நேற்று (செப்.29) பண்ணைப்புரம் பாவலர் தெருவில் உள்ள அரசு பொதுக் கழிப்பறை தொட்டியின் மேல் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது தொட்டியின் மேல், மூடி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கல் திடீரென உடைந்து இரண்டு குழந்தைகளும் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்துள்ளனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தொட்டிக்குள் விழுந்த குழந்தைகளையும் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

மேலே கொண்டு வந்த இரு குழந்தைகளில் நிகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சுப ஸ்ரீயை உடனே உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் அந்த குழந்தையும் உயிரிழந்தது.

இதனால் ஆத்திரமடைந்த குழந்தைகளின் உறவினர்கள் கோம்பை போடி நெடுஞ்சாலையில் பண்ணைப்புரம் பேருந்து நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இ

பின்னர், அங்கு சென்ற காவல் துறையினர் மற்றும் உத்தமபாளையம் கோட்டாட்சியர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க:சாட்சி சொல்ல வந்தவர்களுக்கு கொலை மிரட்டல்...இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details