தேனி:பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை பெய்த தொடர் மழை காரணமாக அருவியில் நீர் ஆர்ப்பரித்து வருகிறது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால், கும்பக்கரை அருவியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குளிக்க சுற்றுலாப் பயணிகள் காலை 8 மணி முதல் அதிக அளவில் குவிந்து வந்தனர்.