தேனி: கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். சுருளி அருவியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, இல்லங்கள் மற்றும் கோவில்களுக்கு தேவையான புனித நீர் எடுப்பது, மற்றும் குளிப்பதற்கு என ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலத்தில் இருந்தும் வந்து செல்கின்றனர்.
Suruli Falls: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை! - தேனி சுருளி அருவி
தேனி சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
இந்நிலையில் சுருளி அருவியின் நீர்வரத்து பகுதிகளில் நேற்று பெய்த மழையினால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
இதையும் படிங்க:மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை; குற்றால அருவியில் குளிக்கத் தடை!