தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 18, 2020, 11:10 AM IST

ETV Bharat / state

வராக நதிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தேனி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு
பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் என மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் நேற்றிரவு, பகல் என கனமழை பெய்தது.

நேற்று (நவ.17) ஒரே நாளில் மாவட்டத்தில் சராசரியாக 13.9மி.மீ மழை பதிவாகியது. இதனால் முக்கிய நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு

மாவட்டத்தில் மொத்த மழையளவு 59செ.மீ, அதில் அதிகபட்சமாக கூடலூரில் 77.0 மி.மீ, உத்தமபாளையத்தில் 71.0 மி.மீ, சோத்துப்பாறை அணையில் 64.0மி.மீ, பெரியகுளத்தில் 50.0மி.மீ முறையே மழை பதிவாகியுள்ளது.

பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள சோத்துப்பாறை அணை, கல்லாறு, அகமலை, கும்பக்கரை அருவி உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு முதல் விடியும் வரை கனமழை கொட்டித் தீர்த்தது.

126அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணை ஏற்கனவே நிரம்பி வழிகின்ற நிலையில், தற்போது அணைக்கு வந்துகொண்டிருக்கும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு

கும்பக்கரை அருவி, கல்லாறு, செலும்பாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏற்பட்ட நீர்வரத்தால், பெரியகுளம் நகரின் மத்தியில் செல்லக்கூடிய வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது.

இதனால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட வராக நதியின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வராக நதியில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் உயர்வு: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details