தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் அருகே மாவட்ட எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனைச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆய்வுமேற்கொண்டார். அப்போது, வெளிமாநிலங்களிலிருந்து தேனி, பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
இதையடுத்து, கொடைக்கானல் செல்லும் வெளிமாநில நபர்கள் குறித்த விவரங்களை உடனடியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காகச் சென்று, சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு திரும்பி பரிசோதனைக்காக ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள இளைஞர்களிடம் நலம் விசாரித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.