தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரோனா முன்னெச்சரிக்கை: தேக்கடி படகு சவாரி மார்ச் 31வரை நிறுத்தம் - thekkadi boat house closed

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேக்கடி படகு சவாரி மார்ச் 31 வரை நிறுத்துவதாக பெரியார் புலிகள் சரணாலய காப்பகம் அறிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை  தேக்கடி படகு சவாரி  தேக்கடி படகு சவாரி நிறுத்தம்  thekkadi boat house closed  corona virus issue
தேக்கடி படகு சவாரி மார்ச் 31வரையில் நிறுத்தம்

By

Published : Mar 11, 2020, 9:43 AM IST

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பரவிவருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துவருகிறது.

அதன்படி, அம்மாநிலத்தில் மார்ச் 31ஆம் தேி வரை திரையரங்குகளை மூட அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேக்கடி படகு சவாரியை தற்காலிகமாக நிறுத்த இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமுள்ள பெரியார் புலிகள் சரணாலய காப்பகத்திற்குள்பட்ட சுற்றுலா இடங்களையும் மூடிட வனத் துறை உத்தரவிட்டுள்ளது.

தேக்கடி படகு சவாரி மார்ச் 31 வரை நிறுத்தம்

இது தொடர்பாக பெரியார் புலிகள் காப்பக சரணாலய துணை இயக்குநர் ஷில்பா குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கொரோனா வைரல் தாக்குதல் அதிகம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடுவதைத் தவிர்ப்பதற்குப் பெரியார் புலிகள் சரணாலயப் பகுதிகளுக்குள்பட்ட தேக்கடி படகுத் துறை, இயற்கை சுற்றுச்சூழல் இடங்கள், சுற்றுலா விடுதிகள் உள்ளிட்ட இடங்களை வரும் மார்ச் 31 வரை நிறுத்திட வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள வனத் துறையின் இந்த அறிவிப்பால் தேக்கடி படகுத் துறைப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இதையும் படிங்க:'கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக மாறிய தமிழ்நாடு'

ABOUT THE AUTHOR

...view details