தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா - தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு - திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன்

தேனி: உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு
தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

By

Published : Dec 26, 2019, 6:28 PM IST


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னன்படுகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பழுதடைந்த சத்துணவு கூட கட்டடம் இடிந்துவிழுந்தது. இதில் வலது கையை இழந்த மாணவர் செல்வக்குமாரின் குடும்பத்தினரை, திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களிடம் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. பொதுத் தேர்தல் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெறும் வேலையில், ஆளுங்கட்சியினர் இறங்கியுள்ளனர். ஓட்டுக்கு 200 முதல் 300 ரூபாய் வரையில் விநியோகம் செய்யப்படுகிறது. அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அது நிச்சயம் நடக்காது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்தான் மிகப்பெரிய வெற்றி பெறும்" என்று உறுதிப்படத் தெரிவித்தார்.

தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

மேலும், பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிமுக, பாமக ஆதரித்து வாக்களித்தது மன்னிக்க முடியாது எனவும் அதிமுக செய்த ஊழலால் வருமான வரி சோதனைக்கு பயந்தே, பாஜக கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் கண்மூடித்தனமாக ஆதரித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறுவது தவறு - தங்க தமிழ்செல்வன்

ABOUT THE AUTHOR

...view details