தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், போடி, தேவாரம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளிலிருந்து நாள்தோறும் சுமார் 600 க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் கூலித்தொழிலாளர்கள் கேரளப்பகுதிகளான குமுளி, வண்டிப்பெரியார், சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், அடிமாலி, கட்டப்பனை, மூணாறு போன்ற பகுதிகளிலுள்ள தோட்டங்களுக்கு கூலிவேலைக்கு செல்கின்றனர்.
தற்போது கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக வெளிமாநிலங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு - கேரள எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள 16 மாவட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து எல்லைப் பகுதியில் தீவிர பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.