தேனி மாவட்டம், கம்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக்கடையில் விற்பனையாளராக பணிபுரிபவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வழக்கம் போல அவர் கடையைத் திறக்க வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட தகவல் மொபைல் மூலம் இன்று (ஆக18) தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடையை திறக்க முயன்றவர் அருகில் அமர்ந்து கொண்டு மற்ற பணியாளர்களை திறக்கச் செய்தார். இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கம்பம் நகராட்சி சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.