குன்னூரைச் சேர்ந்த முனியாண்டி (57) என்பவர், தன்னிடம் பணமோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், கடந்த பிப்.14-ம் தேதி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பிப்.15-ம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.