தமிழ்நாடு

tamil nadu

பெரியகுளத்தில் சாதியை சொல்லி ஆசிரியர்கள் திட்டுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு

By

Published : Jul 22, 2022, 7:36 PM IST

பெரியகுளத்தில் ஆசிரியர்கள் தங்களை சாதியை சொல்லி திட்டுவதாக மாணவர்கள் தெரிவிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆசிரியர்கள் ஜாதியை சொல்லி திட்டுவதாக மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார்
ஆசிரியர்கள் ஜாதியை சொல்லி திட்டுவதாக மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார்

தேனி: பெரியகுளம் பகுதியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பட்டியலினத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்காமல் பள்ளி நிர்வாகம் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனைக் கேட்ட மாணவ, மாணவிகளை சாதி பெயரை சொல்லி பள்ளி ஆசிரியர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை அறிந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மாணவர்கள் குற்றச்சாட்டு

இந்த சம்பவத்தையடுத்து பள்ளியை சில அமைப்புகள் முற்றுகையிட போவதாக தகவல் பரவியது. இதனையடுத்து காவல்துறையினர் பள்ளி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:தேனி: கணவர் இறந்த துயரம் தாங்க முடியாமல் மனைவி தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details