தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேவுள்ள நல்லகருப்பன்பட்டியைச் சேர்ந்த 62வயது மூதாட்டி ஒருவர், உடல் நலக்குறைவால் கடந்த மூன்று தினங்களுக்கு முன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனிடையே சிகிச்சையிலிருந்த மூதாட்டிக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறி சடலத்தை பாதுகாப்பு அம்சங்களுடன் அடக்கம் செய்வதற்கு சுகாதாரத்துறையினர் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இறந்த மூதாட்டியின் உடலை தாங்களாகவே தகனம் செய்து கொள்வதாகக் கூறி சடலத்தைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள், திடீரென மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் கரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை வைத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.