தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் கொட்டப்படும் கேரள கழிவுகளைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை! - சுற்றுச்சூழல் பாதிப்பது

தேனி: புறவழிச்சாலை அருகே உள்ள வனப்பகுதியில் கேரள கழிவுகளைக் கொட்டி தீவைத்து எரித்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kerala waste being dumped in Theni
Kerala waste being dumped in Theni

By

Published : Jan 5, 2020, 8:24 AM IST

தேனியிலிருந்து கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி மூன்று மலைப்பாதைகள் கேரளத்திற்குச் செல்கிறது. காலாவதியான மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்டவைகளை கேரளத்திலிருந்து தமிழ்நாட்டை இணைக்கும் மலைப்பாதையிலிருந்து வனப்பகுதிக்குள் கொட்டிச்செல்வது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாக இருந்துவந்தது.

பொதுமக்களின் புகாரையடுத்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் வாகனங்கள் சோதனைச் சாவடிகளில் பலத்த சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டன. இதன் காரணமாக கேரள கழிவுகள் தமிழ்நாடு பகுதிக்குள் கொட்டுவது தடுக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக கேரள கழிவுகளை தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளாக இருக்கும் இடங்களான ஆண்டிபட்டி சாஸ்தா கோயில் போன்ற பகுதிகளில் அவ்வப்போது கொட்டிவந்தனர். இந்நிலையில் தற்போது தேனி நகரை ஒட்டியுள்ள புறவழிச்சாலை அருகே வால் கரடு வனப்பகுதிக்குள் கேரளக் கழிவுகளை அதிக அளவு கொட்டி தீவைக்கின்றனர்.

இதில் காலாவதியான வாகனங்களின் உதிரிபாகங்கள், நெகிழிக் கழிவு, மருத்துவக் கழிவு, காலாவதியான ஓட்டுநர் உரிமம், காலாவதியான வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்டவைகளை வனப்பகுதிக்குள் கொட்டி தீவைத்துச் செல்கின்றனர்.

இந்தக் கழிவுகளில் பெரும்பாலானவை கேரளாவைச் சேர்ந்த கோட்டயம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகள் எனத் தெரியவந்துள்ளது.

தேனியில் கொட்டப்படும் கேரள கழிவுகளைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

இது மட்டுமில்லாமல் இந்தக் கழிவுகளில் தேவையற்ற மின்சாதன பொருள்களையும் கொட்டி தீவைப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. இதனால் புறவழிச்சாலையில் செல்லக் கூடியவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. வனப்பகுதிக்குள் கழிவுகளைக் கொட்டுபவர்கள் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கொட்டிச் செல்கின்றனர்.

இவ்வாறு வனப்பகுதிக்குள் கழிவுகளைக் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பது மட்டுமல்லாமல் மனவளமும் பாதிப்படைகிறது. எனவே கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேனி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்றே தேர்வு - மாணவர்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details