சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவருக்கு சிறை! - Arrested for pocso molesting minor girls
தேனி: ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரு வேறு இடங்களில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இருவருக்கு தேனி மகிளா நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
![சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவருக்கு சிறை! accused](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5186843-thumbnail-3x2-rt.jpg)
accused
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியகரான்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார் (34). இவர் 2017ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதயகுமாரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
சிறைத்தண்டனை வழங்கப்பட்ட கைதிகள்
இதேபோல், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(28). இவர் 2017ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுதொடர்பாக ஜெயமங்கலம் காவல் துறையினர் கடத்தல், பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பையும் இன்று தேனி மகிளா நீதிமன்றம் வழங்கியது. அதில் குற்றவாளி கார்த்திக்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் மூன்று லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து இவ்விரு வழக்கின் குற்றவாளிகள் உதயகுமார், கார்த்திக் ஆகியோரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.