தமிழ்நாட்டில் சீர்மரபினர் உள்பட 68 சமுதாய உட்பிரிவுகளைக் கொண்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் டிஎன்சி என்ற இரட்டை முறை சான்றிதழை நிறுத்திவிட்டு டிஎன்டி என்ற ஒற்றை சான்றிதழ் முறையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அச்சமுதாய மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம்:
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையம் அருகே சீர்மரபினர் சமுதாய மக்களுக்கு டிஎன்டி சான்றிதழ் வழங்கக் கோரி அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் இன்று (டிச.30) செல்ஃபோன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறங்க செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது: