தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட போடந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி (50). இவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதர் ஓ.ராஜாவிற்கு சொந்தமான தோட்டத்தில், கடந்த ஐந்து வருடங்களாக டிராக்டர் ஓட்டுநராக பணிப்புரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை வேலைக்கு சென்ற முனியாண்டி இறந்து விட்டதாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த இறந்தவரின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் முனியாண்டியின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகக் கூறி, குச்சனூர் விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து இறந்தவரின் உறவினர்கள் கூறுகையில், "ஐந்து வருடங்களாக ஓ.ராஜாவின் தோட்டத்தில் முனியாண்டி வேலை செய்து வந்தார். பெரும்பாலும் அவரது தோட்டத்தில் உள்ள டிராக்டரை இவர் தான் ஓட்டுவார். இன்று டிராக்டர் ஓட்டச் சென்றவர், திடீரென்று இறந்துவிட்டதாகவும், அவரது உடல் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர். எங்களுக்கு எந்தத் தகவலும் அளிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல என்ன காரணம்?