தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் இன்று காலை 9 மணிக்கு பலமேடு மஞ்சமலை கோவிலில் பரப்புரை மேற்கொண்டார். இதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆர் பி. உதயகுமார் கலந்து கொண்டனர். மஞ்சமலை கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டிளிக்கையில் கூறியதாவது:
அதிமுக சார்பாக போட்டியிடுகின்ற கூட்டணியில் 40 நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர்கள் கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்டு, இன்றைக்கு தமிழகம் உள்பட தேனி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தேர்தல் பரப்புரை முழுமையாக வெற்றி பெறுவதற்கும், மக்களுடைய நல்லாதரவை பெற்று மகத்தான வெற்றியைப் பெறுவதற்கும், போட்டியிடும் 40 வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கும் அருள்மிகு அய்யனார் சுவாமி திருக்கோவிலுக்கு நாங்கள் முதற்கட்ட பரப்புரையை வழிபட்டுத் தொடங்கியுள்ளோம்.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடன் அதிமுக சார்பாக போட்டியிடுகின்ற 40 வெற்றி ஏற்பாடுகளும் மாபெரும் வெற்றியை அடைவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:
தேர்தல் அறிக்கை நேற்று வெளியானதையடுத்து, கூடுதலாக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
பொதுவாக, நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலானாலும் பொதுத்தேர்தலை ஒட்டி பொதுமக்களுடைய பாதுகாப்பிற்கு, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை அதிமுக நிறைவேற்றும். இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிக்கையும் நிறைவேற்றுவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுத்து, அதனை நிறைவேற்றும் என்று உறுதியளிக்கிறேன்.
தர்மயுத்தத்தில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்த 10 எம்.பிக்களைத் தவிர மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறத பத்தி என்ன நினைக்கிறீர்கள்?