தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வெட்டில் ஓபிஎஸ் மகன் பெயர்; சர்ச்சை எதிரொலியால் நீக்கம்! - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்

தேனி: தேர்தல் முடிவுக்கு முன்னரே, நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் என்று கோயில் கல்வெட்டில் பெயர் பொறிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியதால், கல்வெட்டில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டில் பொறிக்கப்பட்ட ஓபிஎஸ் மகன் பெயர் நீக்கம்

By

Published : May 17, 2019, 11:55 AM IST

Updated : May 17, 2019, 2:10 PM IST

தேனி மாவட்டம், குச்சனூரில் அமைந்துள்ள காசி ஸ்ரீ அன்னபூரணி கோயிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

கோயில் கல்வெட்டில் ஓபிஎஸ் மகன் பெயர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் எம்.பி. என பொறிப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மூத்த மகனான ஓ.பி. ரவீந்திரநாத் குமார், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். இதையடுத்து தற்போது தேர்தல் முடிவுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் என்று வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே கோயில் நிர்வாகம் எப்படி கல்வெட்டில் பெயர் பொறிக்கலாம் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு அகற்றப்பட்டது. மேலும், புதிதாக நன்கொடை வழங்கியவர்கள் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.

Last Updated : May 17, 2019, 2:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details