எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மூன்றாண்டானதைத் தொடர்ந்து அதன் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுவருகிறது. 'முத்திரை பதித்த மூன்றாண்டு-முதலிடமே அதற்குச் சான்று' என்கிற தலைப்பில் அரசின் புகைப்படக் கண்காட்சி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டுவருகிறது.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தேனி பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.