தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2020, 5:50 PM IST

ETV Bharat / state

கரோனா அறிகுறி: சிகிச்சைக்கு வந்தவருக்கு தீவிர கண்காணிப்பு

தேனி: போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

one person with corona symptoms admitted in theni Govt hospital
one person with corona symptoms admitted in theni Govt hospital

தேனி மாவட்டம் போடி அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (30). இவர் பஞ்சாப், திருப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று (மார்ச் 24) இரவு போடிக்கு வந்த இவருக்கு காய்ச்சல், சளி இருந்துள்ளது.

இதையடுத்து, போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு முதல்கட்டமாக சளி, ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. சளி பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறி தெரியவந்தது.

சிகிச்சைக்கு வந்த நபருக்கு தீவிர கண்காணிப்பு

இதனால், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா ஆய்வகத்திற்கு சதீஸ் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க... மதுரைக்கு வந்த வெளிநாட்டவருக்கு கரோனா அறிகுறி: மருத்துவமனையில் சிகிச்சை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details