தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையிலுள்ள வாகம்புளித் தெருவில் வசித்துவருபவர்கள் ஹக்கீம் மற்றும் ஜாபர். இவர்கள் தாமரைக்குளம் பகுதியில் உள்ள காலேஜ் விலக்கில் கறிக்கடை வைத்து தொழில் நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் தாமரைக்குளம் சுப்பிரமணியசிவா தெருவில் குடியிருந்து வரும் சையது முகமது என்பவருடைய மாமனாரும் கறிக்கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், தொழில் போட்டி காரணமாக சையது முகமதுவின் மாமனாரை ஹக்கீம், ஜாபர் ஆகியோர் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக் கேட்பதற்காக ஜாபர் வீட்டிற்கு சையது முகம்மது சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாயத்தகராறு முற்றி ஒரு கட்டத்தில், கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஹக்கீம், ஜாபர் ஆகியோருடன் இருந்த இரண்டு நபர் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து சையது முகம்மதுவை கடுமையாக தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளார்.