தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொன்னன்படுகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சத்துணவு சமைப்பதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமையல் கூடம் பயன்பாடின்றி இருந்தது. அந்த கட்டிடத்தை இடிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
இந்நிலையில், பள்ளி மதிய உணவு இடைவேளை நேரத்தில் மாணவர்கள் அந்த கட்டிடம் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் செல்வக்குமார், ஈஸ்வரன் உள்பட மூன்று மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.