நீட் தேர்வு முறைகேடு வழக்கில் ஐந்து மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முதற்கட்டமாக மாணவர்கள் அனைவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியது.
அதனைத் தொடர்ந்து உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன், ராகுலின் தந்தை டேவிஸ், பிரவினின் தந்தை சரவணன் என மூன்று பேருக்கு மட்டும் கடந்த சில தினங்களுக்கு முன் தேனி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.