தேனி மாவட்டம் உத்தமபாளையம் அதிக அளவிலான இஸ்லாமியர்கள் வாழும் பகுதி. இங்குள்ள அரசு பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவர்கள், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில் ஜூம்மா என்னும் சிறப்பு தொழுகை செய்வதற்காக பள்ளியில் இருந்து அருகே உள்ள மசூதிக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் இந்த இஸ்லாமிய மாணவர்கள் பள்ளிக்குச் சென்று தொழுது விட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த பள்ளி மாணவர்களை இன்று தொழுகை முடித்துவிட்டு மீண்டும் வந்தபோது, சில இந்து அமைப்பினர் புகைப்படம் எடுத்து அவர்களை அச்சுறுத்தியதாகவும், பள்ளி வேளையில் நீங்கள் தொழுவதற்கு செல்லக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து இஸ்லாமிய அமைப்பின் கூட்டமைப்பு சார்பாக உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் உடனடியாக மாணவர்களை அச்சுறுத்திய நபர்களை கைது செய்ய வேண்டுமென இஸ்லாமிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.