திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் குனசேகரன் (40). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி சூரியகுமாரிக்கும்(36) கடந்த 2015ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் தொடர்ந்து திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதையடுத்து மும்பைக்கு தன்னுடன் வருமாறு சூரியகுமாரியை குனசேகரன் வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு சூரியகுமாரி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த குனசேகரன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூரியகுமாரியின் உறவினர் ஜீவா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் குனசேகரனை கைது செய்து நீதிமன்றக் காவலில் உட்படுத்தினர்.