தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால் முல்லைப்பெரியாறு அணை ஆய்வு! - inspection

தேனி: முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக்குழுவினர் ஆய்வு செய்தனர். வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

subcommitee inspection

By

Published : Oct 5, 2019, 12:03 AM IST

கேரள மாநிலம் தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாக இது திகழ்கிறது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றமானது மூவர் குழு ஒன்றை நியமித்தது. இக்குழுவிற்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தற்போது உள்ளார்.

தமிழ்நாடு பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் அருண் கே.ஜேக்கப், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.

இக்குழுவினர், அணைப்பகுதிக்குச் செல்ல தேக்கடியில் உள்ள படகுத்துறை வழியாக சென்றனர்.

முல்லைப்பெரியாறு அணை ஆய்வு
கடந்த ஜுன் 10ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 112 அடியாக இருந்தபோது ஆய்வு செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போது வடகிழக்கு பருவமழைத் தொடங்க உள்ள நிலையில் அணையில் ஏற்படும் மாற்றங்கள் , பராமரிப்பு பணி குறித்து மீண்டும் நீர்மட்டம் 125 அடியாக உயர்ந்துள்ள நிலையில் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

இந்த குழு பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி, மழையின் அளவு, அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்து ஆய்வு மேற்கொள்ளுகின்றனர்.

இதனைத்தொடர்ந்து மாலை குமுளியிலுள்ள பெரியாறு அணை கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், ஆய்வுகள் குறித்து அறிக்கையாக தயார் செய்யப்பட்டு மூவர் குழுவிடம் சமர்ப்பிக்கப்படஉள்ளது.

இதையும் படிங்க: மாற்றான் மனைவி மீது மோகம் கொண்ட இளைஞருக்கு ரூ.5 கோடி அபராதம்

ABOUT THE AUTHOR

...view details