உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று தற்போது தமிழ்நாட்டில் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில் தேனி மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியிலிருந்து 5 கிமீ தூரம் தீவிரக் கண்காணிப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரியகுளம் ரோடு, மதுரைரோடு, சமதர்மபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடைகள் காலை 8 மணி முதல் அடைக்கப்பட்டன.