தமிழ்நாடு

tamil nadu

மகனை வெட்டிக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை; பெரியகுளம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

By

Published : Jun 21, 2022, 6:12 PM IST

தன்னை கட்டையால் தாக்கிய மகனை வெட்டிக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து பெரியகுளம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மகனை வெட்டிக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை; பெரியகுளம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
மகனை வெட்டிக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை; பெரியகுளம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தேனி: பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர், பேச்சியம்மாள். இவருக்கு அழகு ராஜா (வயது17) மற்றும் சிவகுமார் (வயது 16) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்நிலையில் 29.03.2017அன்று இரு மகன்களும் மடிக்கணினிக்கு சண்டை போட்டதில் தாய் பேச்சியம்மாள் அழகு ராஜாவை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அழகுராஜா தாய் பேச்சியம்மாளை கட்டையால் தாக்கிய போது ஆத்திரம் அடைந்த தாய் மகன் அழகுராஜாவை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மகன் அழகு ராஜா உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுற்று மகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற தாய் பேச்சியம்மாள் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு, மகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற தாய் பேச்சியம்மாளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதை கட்டத் தவறினால் மேலும் ஆறு மாத கால மெய்க் காவல் சிறைத் தண்டனையும் விதித்து பெரியகுளத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சிங்கராஜ் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளி பேச்சியம்மாளை காவல் துறையினர் பாதுகாப்புடன் சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க:ஓபிஎஸ்ஸின் கோட்டை வலுவிழக்கிறதா? ஈபிஎஸ்ஸை ஆதரித்த தேனி மாவட்ட அதிமுகவினர்!

ABOUT THE AUTHOR

...view details